என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெஸ்சி காயம் குறித்து பயிற்சியாளர் கருத்து: பார்சிலோனாவிடம் மன்னிப்பு கேட்டது அர்ஜென்டினா
Byமாலை மலர்24 Sep 2016 5:48 AM GMT (Updated: 24 Sep 2016 5:48 AM GMT)
பார்சிலோனா அணிக்காக விளையாடும்போது மெஸ்சி காயம் அடைந்தார். இதனால் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் பார்சிலோனா மீது குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன் மன்னிப்பு கேட்டுள்ளது.
அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் லயோனல் மெஸ்சி. இவர் பார்சிலோனா அணிக்காக லாலிகா தொடரில் விளையாடி வருகிறார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின்போது மெஸ்சிக்கு காயம் ஏற்பட்டது. இதனால் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா அணிக்காக மெஸ்சி பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் அடைந்த அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா, மெஸ்சியின் காயத்திற்கு பார்சிலோனா நிர்வாகம்தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். இதனால் பார்சிலோனா நிர்வாகம் மிகுந்த கவலை அடைந்தது.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன் பார்சிலோனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து பார்சிலோனா அணியின் செய்தி தொடர்பாளர் ஜோசப் விவ்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘அர்ஜென்டினா கால்பந்து அணியின் மானேஜர் கருத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவர் மோசமான எண்ணத்தில் இந்த கருத்தை கூறவில்லை. என்னவிருந்தாலும் அது ஒரு துரதிருஷ்டவமாக கருத்து என்று அர்ஜென்டினா கூறியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனா அணிக்காக மெஸ்சி இளம்வயதில் இருந்தே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் கோபம் அடைந்த அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் எட்கார்டோ பவுசா, மெஸ்சியின் காயத்திற்கு பார்சிலோனா நிர்வாகம்தான் காரணம் என்று தெரிவித்திருந்தார். இதனால் பார்சிலோனா நிர்வாகம் மிகுந்த கவலை அடைந்தது.
இந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன் பார்சிலோனாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து பார்சிலோனா அணியின் செய்தி தொடர்பாளர் ஜோசப் விவ்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘அர்ஜென்டினா கால்பந்து அணியின் மானேஜர் கருத்துக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். அவர் மோசமான எண்ணத்தில் இந்த கருத்தை கூறவில்லை. என்னவிருந்தாலும் அது ஒரு துரதிருஷ்டவமாக கருத்து என்று அர்ஜென்டினா கூறியது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பார்சிலோனா அணிக்காக மெஸ்சி இளம்வயதில் இருந்தே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X