என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைப்பு
Byமாலை மலர்26 Aug 2016 2:13 AM GMT (Updated: 26 Aug 2016 2:13 AM GMT)
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் ஏமாற்றம் குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை தேசிய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது.
புதுடெல்லி :
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லக்கூடிய பந்தயங்களில் ஒன்றாக துப்பாக்கி சுடுதல் கருதப்பட்டது. ஆனால் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உள்பட எல்லா வீரர்களும், வீராங்கனைகளும் வெறுங்கையுடன் நாடு திரும்பினார்கள்.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை தேசிய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது.
தேசிய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா மற்றும் 2 பத்திரிகையாளர்கள் இந்த கமிட்டியில் இடம் பிடித்துள்ளனர். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மனிஷா மல்கோத்ரா கமிட்டியின் கன்வீனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 30 அல்லது 31-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.
கமிட்டி தனது அறிக்கையை 4 வாரத்துக்குள் தேசிய ரைபிள் சங்க தலைவரிடம் சமர்பிக்கும். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கம் வெல்லக்கூடிய பந்தயங்களில் ஒன்றாக துப்பாக்கி சுடுதல் கருதப்பட்டது. ஆனால் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா உள்பட எல்லா வீரர்களும், வீராங்கனைகளும் வெறுங்கையுடன் நாடு திரும்பினார்கள்.
இந்திய துப்பாக்கி சுடுதல் அணியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு செய்ய அபினவ் பிந்த்ரா தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டியை தேசிய ரைபிள் சங்கம் அமைத்துள்ளது.
தேசிய ரைபிள் சங்க செயலாளர் ராஜீவ் பாட்டியா மற்றும் 2 பத்திரிகையாளர்கள் இந்த கமிட்டியில் இடம் பிடித்துள்ளனர். முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மனிஷா மல்கோத்ரா கமிட்டியின் கன்வீனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கமிட்டியின் கூட்டம் வருகிற 30 அல்லது 31-ந் தேதி நடைபெறும் என்று தெரிகிறது.
கமிட்டி தனது அறிக்கையை 4 வாரத்துக்குள் தேசிய ரைபிள் சங்க தலைவரிடம் சமர்பிக்கும். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X