என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இலங்கை தொடரில் ஆஸி. கேப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு: வார்னர் கேப்டன்
Byமாலை மலர்25 Aug 2016 10:55 AM GMT (Updated: 25 Aug 2016 10:55 AM GMT)
இலங்கை அணிக்கெதிராக மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவன் ஸ்மித் கேப்டனாக உள்ளார்.
இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 0-3 என தோற்று ஒயிட்வாஷ் ஆனது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, நேற்றைய 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 3-வது போட்டியும், ஒருநாள் தொடர் முடிந்த பின்னர் டி20 தொடரும் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள இந்த ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வார்னர் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இவர் ஏற்கனவே, துணை கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் விளையாட இருக்கிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவதற்காக ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் தலைமையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 0-3 என தோற்று ஒயிட்வாஷ் ஆனது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, நேற்றைய 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 3-வது போட்டியும், ஒருநாள் தொடர் முடிந்த பின்னர் டி20 தொடரும் நடைபெற இருக்கிறது. மீதமுள்ள இந்த ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் வார்னர் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இவர் ஏற்கனவே, துணை கேப்டனாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடருக்கு அடுத்து ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் விளையாட இருக்கிறது. குறிப்பாக தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடுவதற்காக ஸ்மித்திற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X