search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, டி வில்லியர்சை விட ஜோ ரூட்தான் சிறந்த வீரர்: மொகமது யூசுப் சொல்கிறார்
    X

    விராட் கோலி, டி வில்லியர்சை விட ஜோ ரூட்தான் சிறந்த வீரர்: மொகமது யூசுப் சொல்கிறார்

    விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை விட உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட்தான் என்று பாகிஸ்தான் முன்னாள் பேட்ஸ்மேன் மொகமது யூசுப் கூறியுள்ளார்.
    தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வரும் இந்த தலைமுறை வீரர்களில் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஜோ ரூட், கேன் வில்லியம்சன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இதில் யார் உலகின் சிறந்த வீரர் என்ற விவாதம் நடந்து கொண்டே வருகிறது.

    குறிப்பாக விராட் கோலி, ஜோ ரூட், டி வில்லியர்ஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன மொகமது யூசுப் தற்போதைய சூழ்நிலையில் ஜோ ரூட்தான் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து மொகமது யூசுப் கூறுகையில் ‘‘ஓல்டு டிராஃப்போர்ட்டில் 254 ரன்கள் குவித்த பிறகு ஜோ ரூட்தான் சிறந்த வீரராக இருக்க முடியும் என்று நம்புகிறேன். அவருடைய பேலன்ஸ், ஷாட் தேர்வு மற்றும் அவருடைய நேரம் அனைத்தும் ஒருங்கிணைந்து பாகிஸ்தானுக்கு எதிராக அவருக்கு அற்புதமான டபுள் செஞ்சூரி கிடைத்துள்ளது.

    கடந்த சில வருடமாகத்தான் ரூட் விளையாடி வருகிறார். ஆனால் மூன்று வகை கிரிக்கெட்டிலும் அவரது சராசரியானது மிகவும் அற்புதமாக உள்ளது.

    விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரும் சளைத்தவர்கள் அல்ல. ஆனால், என்னுடைய தனிப்பட்ட கருத்து ஜோ ரூட்தான் நம்பர் ஒன். கோலியும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டபுள் செஞ்சூரி அடித்துள்ளார்.

    ஒரு பேட்ஸ்மேன் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்றால், அவரால் அனைத்து கிரிக்கெட்டிலும் சிறப்பாக ஆட முடியும். இந்த வகையில் ரூட் அல்லது மற்றவர்கள் தொடர்ச்சியாக ரன்கள் சேர்ப்பதால் என்னுடைய கருத்து நிரூபணம் ஆகியுள்ளதாக நினைக்கிறேன்’’ என்றார்.
    Next Story
    ×