என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை பிடிக்க ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையே போட்டி
Byமாலை மலர்25 July 2016 12:43 PM GMT (Updated: 25 July 2016 12:43 PM GMT)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரை இந்தியா 4-0 என கைப்பற்றினால் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ஐ.சி.சி.யின் டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா 118 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 112 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 111 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
தற்போது முதல் நான்கு இடத்திற்குள் உள்ள அணிகள் ஒரே நேரத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடரும் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த நான்கு அணிகளுக்கும் இடையில் புள்ளிகளில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மீதமள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-0 என கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.
4-0 என இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தால் இந்தியா ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதே சமயத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்த வேண்டும்.
ஆஸ்திரேலியா முதல் இடத்தை தக்க வைக்க வேண்டுமென்றால், இலங்கை அணிகெதிராக தொடரை 1-0 எனக் கைப்பற்ற வேண்டும். அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஒரு டெஸ்டிலாவது வெற்றி பெற வேண்டும்.
இதற்கு மாறாக இங்கிலாந்து அணியும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு, பாகிஸ்தானுக்கு எதிராக மீதமுள்ள மூன்று போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒரு போட்டியிலாவது தோல்வியடைந்து, ஆஸ்திரேலியாவை இலங்கை அணி வீழ்த்த வேண்டும்.
ஒருவேளை, பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றி, இலங்கை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரின் முடிவை பொறுத்து அமையும்.
தற்போது முதல் நான்கு இடத்திற்குள் உள்ள அணிகள் ஒரே நேரத்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்கு டெஸ்ட் போடடிகள் கொண்ட தொடரும் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நாளை தொடங்குகிறது. இந்த நான்கு அணிகளுக்கும் இடையில் புள்ளிகளில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆன்டிகுவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மீதமள்ள மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-0 என கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.
4-0 என இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தால் இந்தியா ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறும். அதே சமயத்தில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்த வேண்டும்.
ஆஸ்திரேலியா முதல் இடத்தை தக்க வைக்க வேண்டுமென்றால், இலங்கை அணிகெதிராக தொடரை 1-0 எனக் கைப்பற்ற வேண்டும். அதேவேளையில் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஒரு டெஸ்டிலாவது வெற்றி பெற வேண்டும்.
இதற்கு மாறாக இங்கிலாந்து அணியும் முதல் இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. இதற்கு, பாகிஸ்தானுக்கு எதிராக மீதமுள்ள மூன்று போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று, இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் ஒரு போட்டியிலாவது தோல்வியடைந்து, ஆஸ்திரேலியாவை இலங்கை அணி வீழ்த்த வேண்டும்.
ஒருவேளை, பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றி, இலங்கை ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தினால் பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இது இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடரின் முடிவை பொறுத்து அமையும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X