என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி: தடகளத்திற்கு 23 பேர் தேர்வு
Byமாலை மலர்27 Jun 2016 7:47 AM GMT (Updated: 27 Jun 2016 7:48 AM GMT)
இதுவரை இல்லாத அளவுக்கு ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். தடகளத்திற்கு 23 பேர் தேர்வு ஆகி உள்ளனர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடக்கிறது.
பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி பெற்று உள்ளனர். எந்த ஒரு ஒலிம்பிக் போட்டிக்கும் இவ்வளவு அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றது கிடையாது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 83 பேர் பங்கேற்றதே அதிகமானதாக இருந்தது.
இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 ஆண்கள், 47 பெண்கள். 57 வகையான விளையாட்டு பிரிவில் இந்தியா பங்கேற்கிறது.
தடகளத்தில் 23 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 11 பேர் பெண்கள். 15 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆக்கியில் இரு அணிகளும் (ஆண்கள், பெண்கள்) கலந்து கொள்கின்றன.
100-க்கும் மேற்பட்டோர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதால் இந்த முறை கூடுதலான பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடந்தது. இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோவில் நடக்கிறது.
பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு 103 இந்தியர்கள் தகுதி பெற்று உள்ளனர். எந்த ஒரு ஒலிம்பிக் போட்டிக்கும் இவ்வளவு அதிகமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றது கிடையாது. 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கு 83 பேர் பங்கேற்றதே அதிகமானதாக இருந்தது.
இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். இதில் 56 ஆண்கள், 47 பெண்கள். 57 வகையான விளையாட்டு பிரிவில் இந்தியா பங்கேற்கிறது.
தடகளத்தில் 23 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் 11 பேர் பெண்கள். 15 பிரிவுகளில் அவர்கள் பங்கேற்கிறார்கள். ஆக்கியில் இரு அணிகளும் (ஆண்கள், பெண்கள்) கலந்து கொள்கின்றன.
100-க்கும் மேற்பட்டோர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதால் இந்த முறை கூடுதலான பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X