என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரரான மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு
Byமாலை மலர்27 Jun 2016 6:33 AM GMT (Updated: 27 Jun 2016 6:33 AM GMT)
உலகின் சிறந்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
கிளப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். தனது நாட்டு அணிக்காக ஆடும்போது அவரால் சிறந்த வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 2014-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அவர் சாம்பியன் பட்டம் பெற்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது.
தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்க கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்று கொடுப்பார் என்று அவர் மீது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றம் அடைய வைத்தது. பெனால்டி ஷுட் அவுட்டில் வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கொடுத்தார். இதன்மூலம் மெஸ்சி கனவு கலைந்தது.
இதற்கிடையே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்துள்ளார். நான்கு இறுதி சுற்றுக்குள் நுழைந்தும் ஒருமுறை கூட சாம்பியன் ஆக முடியாதது வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அர்ஜென்டினாவின் தேசிய அணி என்பது இத்துடன் முடிந்துவிட்டது என தனது ஓய்வு அறிவிப்பின் போது மெஸ்சி தெரிவித்தார்.
இனி அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடமாட்டார். இதனால் 2018 உலக கேகப்பையில் அவரை காணஇயலாது. கிளப் அணிக்காக மட்டுமே விளையாடுவார்.
கிளப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். தனது நாட்டு அணிக்காக ஆடும்போது அவரால் சிறந்த வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 2014-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அவர் சாம்பியன் பட்டம் பெற்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது.
தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்க கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்று கொடுப்பார் என்று அவர் மீது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றம் அடைய வைத்தது. பெனால்டி ஷுட் அவுட்டில் வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கொடுத்தார். இதன்மூலம் மெஸ்சி கனவு கலைந்தது.
இதற்கிடையே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்துள்ளார். நான்கு இறுதி சுற்றுக்குள் நுழைந்தும் ஒருமுறை கூட சாம்பியன் ஆக முடியாதது வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அர்ஜென்டினாவின் தேசிய அணி என்பது இத்துடன் முடிந்துவிட்டது என தனது ஓய்வு அறிவிப்பின் போது மெஸ்சி தெரிவித்தார்.
இனி அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடமாட்டார். இதனால் 2018 உலக கேகப்பையில் அவரை காணஇயலாது. கிளப் அணிக்காக மட்டுமே விளையாடுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X