என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வர்ணனையாளர் பொறுப்பில் கவாஸ்கர் நீக்கம்?: கிரிக்கெட் வாரியம் முடிவு
Byமாலை மலர்5 April 2016 6:53 AM GMT (Updated: 5 April 2016 6:53 AM GMT)
அதிக அளவு பணம் கொடுக்கப்படுவதால் வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரை நீக்க விரும்புவதாக கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மும்பை:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல்– மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கலாம் என்று தெரிகிறது.
அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா– தென்ஆப் பிரிக்கா இடையே சமீபததில் நடந்த தொடரில் கவாஸ்கர் ரூ.90 லட்சம் வரை பெற்று இருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு ரூ 10 லட்சம் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 8 மடங்கு அதிகமாக கவாஸ்கர் வாங்குகிறார். இது கட்டுப்படியாகது என்பதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் வாரிய மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல்– மே மாதத்துடன் முடிகிறது. அவரது ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கவாஸ்கருக்கு கொடுக்கப்படும் பணம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவரை வர்ணனையாளர் பொறுப்பில் இருந்து கிரிக்கெட் வாரியம் நீக்கலாம் என்று தெரிகிறது.
அவருக்கு பதிலாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா– தென்ஆப் பிரிக்கா இடையே சமீபததில் நடந்த தொடரில் கவாஸ்கர் ரூ.90 லட்சம் வரை பெற்று இருக்கிறார். ஒரு ஆட்டத்துக்கு ரூ 10 லட்சம் வரை அவருக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து 8 மடங்கு அதிகமாக கவாஸ்கர் வாங்குகிறார். இது கட்டுப்படியாகது என்பதால் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை மேற்கொண்டதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X