search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.
    • ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் ஆகியோருடன் யூடியூப் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார்.

    இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 2012-13-ம் ஆண்டுக்கு பிறகு நேரடி கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஐ.சி.சி. உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டும் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதுகிறது. மற்றபடி இரு நாட்டு தொடருக்கு பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மத்திய அரசு அனுமதி மறுக்கிறது.

    நேரடி தொடர் என்று பார்த்தால் பாகிஸ்தான் அணி கடைசியாக 2012-13-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. அதே சமயம் இவ்விரு அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்து 17 ஆண்டுகள் உருண்டோடி விட்டது.

    இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'ஐ.சி.சி. தொடர்களை தவிர்த்து இந்தியா- பாகிஸ்தான் இடையே இரு நாட்டு போட்டிகளும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்விரு அணிகளும் பொதுவான இடத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    பாகிஸ்தான் சிறந்த வீரர்களை கொண்டுள்ள அணி. குறிப்பாக பந்து வீச்சு வலுவாக உள்ளது. அவர்களுடன் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியில் மோதினால் நிச்சயம் அது ஆகச்சிறந்த போட்டியாக இருக்கும். அற்புதமான ஒரு தொடராக அமையும். முழுக்க முழுக்க கிரிக்கெட் அடிப்படையில் இதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மற்ற விஷயங்களில் எனக்கு ஆர்வம் கிடையாது' என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'இம்பேக்ட்' விதிப்படி ஒவ்வொரு அணியும் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை மாற்று வீரராக சேர்க்க முடிகிறது. இந்த புதுமையான விதி குறித்து ரோகித் கூறுகையில், 'இம்பேக்ட் விதிமுறையால் ஆல்-ரவுண்டர்களின் திறமை மேம்படுவது தடுக்கப்படுவதாக நினைக்கிறேன். ஏனெனில் கிரிக்கெட் என்பது 11 பேர் விளையாட்டே தவிர, 12 பேர் அல்ல. எனவே இம்பேக்ட் விதி என்னை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. இது ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் இன்னும் அதிகமாக பொழுதுபோக்கை கொடுக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை வைத்து பாருங்கள். உதாரணமாக வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே போன்ற ஆல்-ரவுண்டர்கள் இம்பேக்ட் விதியால் பந்து வீசும் வாய்ப்பை பெறவில்லை. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல.

    மேலும், 2008-ம் ஆண்டு முதல் 2023-ம்ஆண்டு வரை ஐ.பி.எல்.-ல் இரண்டு முறை மட்டுமே 250 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு ஐ.பி.எல்-ல் இப்போதே 4 தடவை 250 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டு விட்டன என்றால், இந்தி விதிமுறையின் தாக்கத்தை கவனியுங்கள். அது மட்டுமின்றி கூடுதலாக ஒரு முன்னணி பேட்ஸ்மேன் இறங்கும் போது, உங்களது வழக்கமான 6-வது அல்லது 7-வது வரிசை பேட்ஸ்மேன்கள் 7-8 பந்துகளை சந்திக்க மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது' என்றார்.

    மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணித் தேர்வு தொடர்பாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் நான் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்றும் கூறினார்.

    • அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார்.
    • பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறஹ்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் முறையே ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான சாம் கர்ரன், பிரப்சிம்ரன் சிங் முறையே 6 மற்றும் 0 எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோசோ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் மற்றும் ஹர்பிரீத் சிங் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர்.

    இதன் காரணமாக பஞ்சாப் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சஷான்க் சிங் சிறப்பாக ஆடி 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய அஷுதோஷ் ஷர்மா அதிரடியாக ஆடி 61 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய ஹர்பிரீத் சிறப்பாக ஆடினார்.

    19.1 ஓவர்களில் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை குவித்தது. இதன் மூலம் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை சார்பில் பும்ரா மற்றும் கோட்சி தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் மோத்வால் 2 விக்கெட்களையும், ஸ்ரேயஸ் கோபால் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 78 ரன்கள் குவித்தார்.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 25 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்நிலையில், இந்தப் போட்டியில் 3 சிக்சர் அடித்ததன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த பொல்லார்ட் சாதனையை முறியடித்துள்ளார்.

    ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 224 சிக்சர்கள் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • ரபாடா மற்றும் சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய மும்பை அணிக்கு இஷான் கிஷன் 8 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ரோகித் சர்மா நிதானமாக விளையாடி 36 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் சிறப்பாக ஆடி 78 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இவருடன் விளையாடிய திலக் வர்மா நிதானமாக ஆடினர். போட்டி முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை குவித்தது. மும்பை சார்பில் திலக் வர்மா 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாம் கர்ரன் ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் நார்வேயின் காஸ்பர் ரூட், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சனுடன் மோதினார்.

    இதில் காஸ்பர் ரூட் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியுடன் மோதுகிறார்.

    • பஞ்சாப் அணி 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.
    • மும்பை அணி 2 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

    சண்டிகர்:

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 33-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    பஞ்சாப் கிங்ஸ் ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளைச் சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது.

    இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன.

    • சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
    • டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 39 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

    இந்த நிலையில், சேப்பக்கத்தில் நடைபெறும் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டி டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே. மற்றும் எல்.எஸ்.ஜி. அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஏப்ரல் 20 ஆம் தேதி காலை 10.40 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    டிக்கெட்டுகளின் விலை ரூ. 1700, ரூ. 2 ஆயிரத்து 500, ரூ. 3 ஆயிரத்து 500, ரூ. 4 ஆயிரம் மற்றும் ரூ. 6 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • ஐபிஎல் தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
    • கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார்.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வருகிறது.

    முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கான்வே தனது, கட்டை விரலில் ஏற்பட்ட காயத்தால், வரும் ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியது.

    கடந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக கான்வே 672 ரன்கள் குவித்தார். இந்நிலையில் சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும், கான்வே முதல் பாதியில் விளையாடமாட்டார் என்பது சென்னை அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

    அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அணிக்காக துவக்க வீரராக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் அதன் பின் சற்று தடுமாற்றமாக விளையாடி இதுவரை 6 இன்னிங்ஸில் 133 ரன்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில் காயம் இன்னும் குணமடையாததால் ஐபிஎல் 2024 தொடரிலிருந்து கான்வே முழுவதுமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் எனும் வீரரை 50 லட்சம் அடிப்படை விலைக்கு வாங்குவதாகவும் சென்னை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    36 வயதாகும் வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2022 முதல் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார்.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபெர்டோவுடன் மோதினார்.

    இதில் நூரி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார்.
    • இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிக் செய்த குஜராத் அணி 89 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத்தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணி 8.4 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். சாலை விபத்தில் சிக்கி குணமடைந்து திரும்ப ஐபிஎல் தொடருக்கு வந்திருக்கும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் செயல்பாடு மிகவும் திருப்தி அளிக்க கூடியதாக இருக்கிறது. இதன் காரணமாக அவர் வருகின்ற டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் தேர்வாகவும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கின்றது.

    இந்த நிலையில் நேற்று ரிஷப் பண்ட் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது என ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர் ரவுண்ட் த ஸ்டெம்பில் இருந்து வந்து பேட்ஸ்மேனுக்கு பந்தை வீசுகிறார். இந்த கோணத்திலிருந்து பந்து ரிஷப் பண்ட்டுக்கு வெளியே செல்லும். ஆனால் பந்து மில்லருக்கு எட்ஜ் ஆகி திரும்பி உள்ளே செல்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் வலது புறத்தில் இருந்து இடது புறத்திற்கு திரும்பி மிகவும் அற்புதமான ஒரு கேட்ச் எடுத்தார். இது நம்ப முடியாத ஒன்று. அவர் மிக வேகமாக இருந்தார்.

    இந்த இடத்தில் உங்களுடைய டெக்னிக் மிக சரியாக இருக்க வேண்டும். அந்தப் பந்துக்கு உண்மையில் நீங்கள் திரும்பி வந்து பிடிப்பது மிகவும் கடினமான ஒன்று. அதற்குப் பெரிய அளவில் சக்தி வேண்டும். நேற்று டாஸ் முதல் ரிஷப் பண்ட்டுக்கு எல்லாம் நல்லதாக சென்றது. அவர் பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செய்தார். மேலும் பேட்டிங்கிலும் சில ஷாட் சிறப்பாக விளையாடினார். நேற்று அவர் தொட்டதெல்லாம் தங்கமாக மாறியது.

    என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியிருக்கிறார்.

    • சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. வெற்றி பெற்றது.
    • லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    லக்னோ:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

    சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 3 ஆட்டத்திலும் சி.எஸ்.கே. (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட்) வெற்றி பெற்றது. வெளியூரில் ஆடிய 3 போட்டியில் ஒன்றில் (மும்பை) வென்றது. டெல்லி, ஐதராபாத்திடம் தோற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை ( 19-ந் தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடக்கிறது.

    லக்னோவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சி.எஸ்.கே. அணி தொடர்ச்சியாக 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் நாளைய போட்டியில் ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் சம பலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில், ஷிவம் துபே (242 ரன்) கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (224), டோனி ஆகியோர் மிகவும் நல்ல நிலையில் உள்ளன.

    தொடக்க வீரர் ரவீந்திரா, மிச்சேல், ரகானே ஆகியோர் பேட்டிங்கில் முன்னேற்றம் அடைவது அவசியமாகும். புதுமுக வீரர் சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு கொடுத்து முன் வரிசையில் ஆட வைக்க வேண்டும்.

    பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் (10 விக்கெட்), பதிரனா (8 விக்கெட்), ஜடேஜா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    லக்னோ அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பஞ்சாப் (21 ரன்), பெங்களூரு (28 ரன்) குஜராத் (33 ரன்) ஆகிய வற்றை வென்று இருந்தது. ராஜஸ்தான் (20 ரன்), டெல்லி (6 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    லக்னோ ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரன், ஸ்டோன்ஸ், யாஸ் தாக்கூர், ரவி பிஷ்னோய் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் இதுவரை 3 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு போட்டி முடிவு இல்லை.

    • சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள்.
    • பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    டொராண்டோ:

    உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேண்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரான்டோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 5 பேர் பங்கேற்றுள்ளனர்.

    14 ரவுண்டுகளை கொண்ட இந்த போட்டி தொடரின் 11-வது சுற்று ஒருநாள் ஓய்வுக்கு பிறகு நேற்று நடந்தது.

    சென்னையை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் இந்த சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த பேபியானோ கருணாவை எதிர் கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் இந்த போட்டியில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். அவரது 7-வது டிராவாகும்.

    மற்றொரு சென்னை கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா மற்றும் விதித் குஜராத்தி ஆகியோர் 11-வது சுற்றில் தோல்வியை தழுவினார்கள். ஹிகாரு நகமுரா (அமெரிக்கா) பிரக்ஞானந்தாவையும், இயன் நெபோம்னியாச்சி (ரஷியா) விதித் குஜராத்தியையும் தோற்கடித்தனர்.

    11 சுற்றுகள் முடிவில் ரஷிய வீரர் இயன் நேபோம்னியாச்சி 7 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். டி.குகேஷ், ஹிகாரு நகமுரா ஆகியோர் தலா 6.5 புள்ளியுடன் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளனர.

    பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், விதித் குஜராத்தி 5 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளனர். பேபியானோ 6 புள்ளியுடன் 4-வது இடத்திலும், அலிசேரா பிரவுசியா (பிரான்ஸ்) 4.5 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், நிஜாத் அப்சோவ் (அஜர்பைஜான்) 3 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

    பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை ஹம்பி. பல்கேரிய வீராங்கனை நூர்சிபால் சலிமோவை தோற்கடித்தார். இதன் மலம் அவர் 5.5 புள்ளியுடன் 3 முதல் 5-வது இடங்களில் உள்ளார்.

    மற்றொரு இந்திய வீராங்கனையான சென்னையை சேர்ந்தவருமான வைஷாலி 11-வது சுற்றில் ரஷியாவை அலெக்சான்ட்ரா சோரியாச்சினாவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தினார். வைஷாலி 4.5 புள்ளிகளுடன் 6 முதல் 7-வது இடங்களில் உள்ளார்.

    ×