search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    • ரோடு ஷோ நடத்திய அமித் ஷா பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

    கர்நாடக மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தேஜஸ்வி சூர்யாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    இதற்காக பொம்மனஹல்லியில் ரோடு ஷோ நடத்திய அமித் ஷா வாக்காளர்களிடம் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். ரோடு ஷோவில் அமித் ஷாவுடன் கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர். அசோகா மற்றும் பெங்களூரு தெற்கு பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ரோடு ஷோவை தொடர்ந்து பொது மக்களிடையே உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பெங்களூரு தெற்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேஜஸ்வி சூர்யாவை வாக்காளர்கள் ஐந்து லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், "கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டினார். முதல்வர் சித்தராமையா சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுக்காததால், அப்பாவி பொது மக்கள் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்."

    "கர்நாடகா மாநிலத்தின் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பாராட்டத்தக்க ஒன்றாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்று வாக்குறுதிகளை நிராகரித்து வளர்ச்சி சார்ந்த பிரதமர் மோடியின் ஆட்சியை மக்கள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • கேரளாவில் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்துகள் தெரிவித்தார்.
    • இது அவர் பக்குவமற்ற அரசியல்வாதி என காட்டுகிறது என முதல் மந்திரி பினராயி விஜயன் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது.

    காங்கிரசுக்கு எதிராக கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஓட்டுகள் பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

    இதேபோல், இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்கள் மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கி உள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் கூட்டணிக்கான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

    ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்துள்ளது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கடுமையாக சாடியுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.
    • சமயங்களில் மதத்தை பற்றி அவர் பேசுகிறார்.

    காங்கிரஸ் கட்சி மக்களிடம் கொல்லையடித்து, அவர்களின் செல்வங்களை மோசடி செய்வோருக்கு வாரி வழங்கியதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்தார்.

    இது தொடர்பாக பெங்களூருவில் பேசிய பிரியங்கா காந்தி, "400-க்கும் அதிக இடங்களை கைப்பற்றி அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவோம் என்று பிரதமர் கூறுகிறார். சில சமயங்களில் தன்னை தவறாக பேசுகிறார்கள் என்றும், சமயங்களில் மதத்தை பற்றியும் அவர் பேசி வருகிறார். உலகின் மதிப்புமிக்க நகரங்களில் வசிக்கும் உங்களுக்கு, இது உண்மையில் தேவை தானா?"

    "காங்கிரஸ் உங்களது தாலி மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளாக நாடு சுதந்திரமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தது. யாரேனும் உங்களது தாலியையோ, தங்கத்தையோ திருடியுள்ளார்களா? போரின் போது, இந்திரா காந்தி நாட்டிற்காக தங்கத்தை தானமாக கொடுத்துள்ளார். எனது தாய் நாட்டிற்காக தனது தாலியை தியாகம் செய்துள்ளார்," என்று தெரிவித்தார். 

    • பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.
    • மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் ராஜு பிஸ்டாவை ஆதரித்து சிலிகுரியில் உள்ள ஹில் கார்ட் சாலையில் பா.ஜனதா ரோடு ஷோ நடத்தியது.

    இதில் மத்திய மந்திரிகள் கிரண் ரிஜிஜு மற்றும் நிசித் ப்ரமாணிக், மேற்கு வங்காள மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது EVM தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது தொடர்பாக சுவேந்து அதிகாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு சுவேந்தி அதிகாரி "EVM குறித்து அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். காங்கிரஸ் கட்சி கர்நாடகா மற்றும் தெலுங்கானா தேர்தலில் வெற்றி பெற்றபோது EVM சரியானது. பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. 400 இடங்களுக்கு மேல் பிடிக்கும் வகையில சென்று கொண்டிருக்கிறது" என்றார்.

    • கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை.
    • வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தலைவர் அல்கா லம்பா கூறியதாவது:-

    பிரதமர் மோடி வட இந்தியாவில் இருந்து கவனத்தை தென்இந்தியா மீது திருப்பியுள்ளார். தென் இந்தியாவில் தெருத்தெருவாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏனென்றால் வடஇந்தியாவில் பா.ஜனதா மிகப்பெரிய அளவில் இடங்களை இழக்கும் நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த தோல்விகளை சரிகட்ட, அவர்கள் தென்இந்தியாவில் பிரசாரம் செய்கிறார்கள்.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட 40 இடங்கள் உள்பட இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 102 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்தமுறை பா.ஜனதாவுக்கு வாக்களித்த ஒரு கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க வரவில்லை. வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டார்கள். இதனால் பா.ஜனதாவுக்கு ஒரு கோடி வாக்குகள் குறைந்துவிட்டது.

    நாட்டில் மோடி அலை ஏதும் வீசவில்லை. பா.ஜனதா 200 இடங்ளுக்கும் குறைவான இடங்களிலேயே வெற்றி பெறும். காங்கிரஸ் இல்லாத இந்தியா என பா.ஜனதா சொல்கிறது. சமீபத்தில் இரட்டை என்ஜின் அரசான பா.ஜனதாவை கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வீழ்த்தியது. தெலுங்கானாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜனதாவின் கனவை தகர்த்தது.

    பிரதமர் மோடி 10 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால், பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி ஜனநாயகத்தின் 4-வது தூணாக கருதப்படும் மீடியா கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

    • மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள்.
    • நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்.

    மும்பை தாக்குதல் (26/11) சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டேவிட் ஹெட்லியை சந்தித்ததாக கூறப்படும் மும்பை சேர்ந்த ஒருவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மம்தாவின் உறவினருமான அபிஷேக் பானர்ஜின் வீடு மற்றும் அலுவலகத்தை நோட்டமிட்ட நிலையில் கைது செய்துள்ளது.

    இந்த நிலையில்தான் தங்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது ஜெயிலில் அடைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளது.

    இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:-

    பா.ஜனதா தலைவர் ஒருவர் வெடிகுண்டு வெடிப்பேன் எனச் சொல்கிறார். மம்தா பானர்ஜி மீது உங்களுக்கு வெறுப்பு இருந்தால் என்னை கொன்றுவிடுங்கள். நீங்கள் அபிஷேக் பானர்ஜியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள், அவர் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்பே நாங்கள் அந்த நபரைப் பிடித்தோம்.

    கைது செய்யப்பட்ட நபர் அபிஷேக்கின் வீட்டை நோட்டமிட்டுள்ளார். பேஸ்டைம் (Facetime App) மூலமாக அபிஷேக்கை அழைத்து சந்திக்க நேரம் கேட்டுள்ளார். அபிஷேக் குற்றவாளிக்கு சந்திக்க நேரம் வழங்கியிருந்தால், அபிஷேக்கை அந்த குற்றவாளி கொலை செய்திருக்க முடியும்.

    பா.ஜனதா அவர்களுக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்ய அல்லது சிறையில் அடைக்க விரும்புகிறது. அவர்கள் சிலரை உலகில் இருந்து அனுப்ப விரும்புகிறது. நீங்கள்தான் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்றால், மக்களை மிரட்ட வேண்டிய அவசியம் என்ன.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • நாட்டின் சொத்துக்களை அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே காங்கிரஸ் பகிர்ந்து கொடுக்கும் - மோடி
    • அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் "அதிக குழந்தைகள் பெற்றவர்கள், மக்களின் சொத்துகளை அள்ளிக்கொண்டு போவார்கள் என விமர்சித்த மோடி மற்றும் அவரது கூட்டணியின் நிலை குறித்து பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    1. சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸுக்கு 13 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    2. அரசியலமைப்பை உருவாக்கியவர், பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கருக்கு 13 உடன்பிறந்தவர்கள் இருந்தனர்.

    3. பாரத ரத்னா விருது பெற்ற முன்னாள் குடியரசுத் தலைவருமான வி.வி.கிரிக்கு 13 குழந்தைகள் உள்ளனர்

    4. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    5. முதல்வர் நிதிஷ்குமாருக்கு 4 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    6. பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    7 பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸ்க்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    8 பிரதமர் மோடியின் மாமா நரசிங் தாஸ்க்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    9. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு 6 சகோதரிகள் உள்ளனர்.

    10. முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு 6 சகோதர சகோதரிகள் உள்ளனர்.

    11: தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ்க்கு 9 சகோதர சகோதரிகள் உள்ளனர்

    12. தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூருக்கு 6 சகோதர சகோதரிகள் இருந்தனர்.

    13. முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

    14. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு 8 குழந்தைகள் உள்ளனர்.

    என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • மோடியின் அலை வீசவில்லை. அதற்கு அவருடைய பொய்தான் காரணம்.
    • 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன.

    தென்மாநிலங்களில் கடந்த முறையை விட தற்போது அதிகமான இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜனதா தீவிர தேர்தல் பணி மேற்கொண்டு வருகிறது. கடந்த முறை தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களில் கர்காடகாவில் உள்ள 28 இடங்களில் 26 இடங்களிலும், தெலுங்கானாவில் 17 இடங்களில் நான்கிலும் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த முறை இதை தாண்ட வேண்டுமென்றால் கர்நாடகா மாநிலத்தில் அதே 26 இடங்களை பிடிக்க வேண்டும். ஆனால், தற்போது மாநில கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கடும் சவாலாக விளங்குகிறது. இதனால் பா.ஜனதா 26 இடங்களை கைப்பற்றுமா? என்பதில் சந்தேகம் எழுகிறது.

    இதற்கிடையே மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. அது தங்களுக்கு சாதகமாக அமையும் என நினைக்கிறது.

    இந்த நிலையில்தான் கர்நாடகா மாநிலத்தில் மோடி அலை வீசவில்லை, காங்கிரஸ் அரசின் உத்தரவாத திட்டங்களுக்கு சாதகமான அலை வீசுகிறது என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "இங்கே மோடி அலை இல்லை. ஏனென்றால் அவருடைய பொய்தான் அதற்கு காரணம். அவருடைய பொய்களை மக்கள் உணர்ந்து விட்டனர். எனவே நாடு முழுவதும் பிரதமர் மோடி வீசவில்லை. எதாவது அலை வீசுகிறது என்றால் அது எங்களுடைய உத்தரவாத அலையாகும்.

    2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது 165 வாக்குறுதிகளில் 158 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 130 புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. 2019 முதல் 2023 வரை ஆட்சியில் இருந்த பா.ஜனதா எந்தவொரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை" என்றார்.

    • ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று பஜ்ரங் தள் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
    • மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் தட்டில், பிரியாணி பரிமாறியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவியது.

    இதை அறிந்த உள்ளூர் மக்களும் பஜ்ரங் தள் உறுப்பினர்களும் கடையைச் சுற்றி, கும்பலாக திரண்டு ராமர் படம் இருக்கும் பேப்பர் தட்டுகளில் பிரியாணி வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உணவக உரிமையாளரை கைது செய்தனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா அல்லது மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதைச் செய்தார்களா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார்.
    • வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை?

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா தெற்கு தொகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

    அப்போது பேசிய அமித் ஷா, "திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எல்லை வழியே ஊடுருவல் தடையின்றி தொடர்கிறது. முதல்வர் மம்தா பேனர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கிறார். அதன் மூலம் இங்கு குடியேறிய அகதிகளுக்கு குடியுரிமை பெறுவதை அவர் தடுக்கிறார்.

    வங்கதேசத்தில் இருந்து வரும் இந்து மற்றும் புத்த அகதிகள் இந்தியாவில் குடியுரிமை பெற்றால் மம்தாவிற்கு என்ன பிரச்சனை? நீங்கள் ஊடுருவலையும் ஊழலையும் நிறுத்த விரும்பினால், நீங்கள் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

    அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் எல்லைப் பாதுகாப்பு படை (BSF), வங்கதேச - இந்திய எல்லையை கண்காணிக்கும் நிலையில் அவர் மேற்கு வங்காள மாநில அரசு மீது குற்றம் சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    • 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    அகமதாபாத்:

    குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 26 மக்களவைத் தொகுதிகளில், காங்கிரஸ் 23 இடங்களிலும், அதன் இந்திய கூட்டணிக் கட்சியான ஆம் ஆத்மி கட்சி பரூச் மற்றும் பாவ்நகர் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

    இதையடுத்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் கடந்த 19-ந்தேதி அன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இப்பட்டியலில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், பொதுச் செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் ராஜஸ்தான் எம்எல்ஏ சச்சின் பைலட், கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    ×