search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானது - அருண் ஜெட்லி
    X

    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானது - அருண் ஜெட்லி

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானதாக அமைந்து விடும் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:
     
    காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, மீனவர் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு, விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், நீட் தேர்வு ரத்து, காலியாக உள்ள 22 லட்சம் அரசு பணியிடங்களுக்கு உடனடியாக ஆட்கள் நியமனம், 100 நாள் வேலையுறுதி திட்டம் 150 நாட்களாக உயர்வு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



    இதற்கு பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி நாட்டுக்கு ஆபத்தானதாக அமையும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

    பிரிவினைவாத சட்டத்தை ஒழிப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சியின் தலைமை மாவோயிஸ்ட்டுகள் மற்றும் ஜிஹாதிகளின் பிடியில் சிக்கியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் முன்னர் ஜவஹர்லால் நேரு கடைபிடித்த வரலாற்று பிழையை கடைபிடிக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.

    தேர்தல் அறிக்கையில் ஆபத்தான வாக்குறுதிகளை அளித்துள்ள காங்கிரஸ் கட்சி அவற்றில் ஒன்றையும் நிறைவேற்றப் போவதில்லை. நிறைவேற்றினால் அது நாட்டுக்கே ஆபத்தாக அமைந்து விடும் என அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். #Congresspromises #dangerouspromises #ArunJaitley
    Next Story
    ×