என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ பிப்ரவரி 17-ம் தேதி இந்தியா வருகை
Byமாலை மலர்22 Jan 2018 3:08 PM GMT (Updated: 22 Jan 2018 3:08 PM GMT)
கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ அரசுமுறை பயணமாக வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #CanadianPM #india
புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனடா நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, இந்தியாவுக்கு வருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ-வுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்ற ஜஸ்டின் டுருடோ வரும் பிப்ரவரி 17-ம் தேதி இந்தியா வருகை தரவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
ஆறாண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும் கனடா பிரதமரின் வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி - ஜஸ்டின் டுருடோ சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு, வர்த்தகம், உயர் கல்வி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித்துறை ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #tamilnews #Canadian PM #india
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X