என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க தேவேந்திர பட்னாவிஸ் சுவிட்சர்லாந்து சென்றார்
Byமாலை மலர்22 Jan 2018 1:49 AM GMT (Updated: 22 Jan 2018 1:49 AM GMT)
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க முதல்-மந்திரி பட்னாவிஸ் சுவிட்சர்லாந்து சென்றார்.
மும்பை :
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் 48-வது உலக பொருளாதார மன்ற மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். அவருடன் கூடுதல் தலைமை செயலாளர் பிரவீன் பர்தேஷி, சிட்கோ மேலாண் இயக்குனர் பூஷண் காக்ரனி, மராட்டிய தொழில் மேம்பாட்டு கழக தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் சேத்தி ஆகியோர் சென்றனர்.
இந்த மாநாட்டில், உலக வங்கி, கோக கோலா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து, மராட்டியத்தில் நிலவும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விளக்குகிறார். மேலும், மராட்டியத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X