என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.: வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த ஆசிரியை
Byமாலை மலர்21 Jan 2018 10:54 AM GMT (Updated: 21 Jan 2018 10:54 AM GMT)
உத்தரப்பிரதேசத்தில் வீட்டுப்பாடம் செய்யாத மூன்றாம் வகுப்பு மாணவனை சக் மாணவர்களால் 40 தடவைக்கும் மேல் கன்னத்தில் அறைய வைத்த ஆசிரியை வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தில் தனியார் பள்ளி ஒன்ரு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று காலை வகுப்பு ஆசிரியை மாணவர்கள் வீட்டு பாடங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, 3-ம் வகுப்பு மாணவன் வீட்டுப் பாடம் செய்யாதது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வகுப்பில் இருந்த மற்ற மாணவர்களை அழைத்து அந்த மாணவனின் கன்னத்தில் அறைய செய்தார்.
அதன்பின், அந்த மாணவன் மாலையில் வீடு திரும்பினான். அவனது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பெற்றோர் கேட்டபிரகே, வகுப்பில் தான் கன்னத்தில் அறை வாங்கியதை தெரிவித்தான்.
இதைத்தொடர்ந்து, அந்த மாணவனின் பெற்றோர் பள்ளி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை வேலையை விட்டு நீக்கப்பட்டார்.
வீட்டு பாடம் செய்யாத 3-ம் வகுப்பு மாணவனை சக மாணவர்களை வைத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X