என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல் மந்திரி
Byமாலை மலர்20 Jan 2018 10:02 AM GMT (Updated: 20 Jan 2018 10:02 AM GMT)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
லக்னோ;
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஜக்பால் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஜக்பால் சிங், உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர் ஜக்பால் சிங்கின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்வதந்திர தேவ் சிங், ஜக்பால் சிங் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அவரது மனைவியிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், ஜக்பால் சிங் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.#tamilnews
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சம்பா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஜக்பால் சிங் வீர மரணம் அடைந்தார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஜக்பால் சிங், உத்தரப்பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர் ஜக்பால் சிங்கின் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
மாநில போக்குவரத்து துறை மந்திரி ஸ்வதந்திர தேவ் சிங், ஜக்பால் சிங் வீட்டுக்கு இன்று நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், அவரது மனைவியிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், ஜக்பால் சிங் பெற்றோரிடம் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X