search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்ட காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 8 போலீசார் காயம்
    X

    ஜம்மு-காஷ்மீர்: புல்வாமா மாவட்ட காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் - 8 போலீசார் காயம்

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் காவல் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 8 போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இன்று மாலை போலீசார் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது, அங்கு வந்த தீவிரவாதிகள் திடீரென காவல் நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் பணியிலிருந்த 8 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர், காயமடைந்த போலீசாரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும், காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×