search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை பதவி விவகாரம்: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குங்கள் - தேர்தல் ஆணையம் பரிந்துரை
    X

    இரட்டை பதவி விவகாரம்: 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்குங்கள் - தேர்தல் ஆணையம் பரிந்துரை

    இரட்டை பதவி தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கிய 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #aamaadhmimlas #electioncommision
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான ஆட்சியில், முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி வகித்து வருகிறார். அவர் தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 21 பேரை பாராளுமன்ற செயலர்களாக நியமித்தார். இது அமைச்சருக்கு நிகரான பதவி ஆகும். 

    இதனால், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள், ஆதாயம் தரும் கூடுதல் பதவியை வகித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் அவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. தேர்தல் ஆணையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. 

    இரட்டை ஆதாய புகாரில் சிக்கிய 21 எம்.எல்.ஏ.க்களில் ஜர்னைல் சிங் ராஜினாமா செய்ததால்  அவர் மீதான குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. மற்ற 20 பேர் மீதான புகார் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது.



    இந்நிலையில், இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக, 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுங்கள் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியுள்ளது.

    அந்த கடிதத்தில், ‘டெல்லியை சேர்ந்த 20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் ஆதாயம் தரும் கூடுதல் பதவி வகித்தனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி வகிப்பதோடு, ஆதாயம் தரும் வேறு ஒரு பதவியிலும் வகித்தனர். எனவே, ஆதாயம் தரும் பதவி வகிக்கக் கூடாது என்ற விதியின் கீழ் அவர்களை தகுதி நீக்கம் செய்யுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.

    இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பதவியிழக்கலாம் என தெரிகிறது. #aamaadhmimlas #electioncommision #tamilnews
    Next Story
    ×