search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
    X

    பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி

    மேற்கு வங்காளம் மாநிலம் மிந்தாபூர் மாவட்டத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் மிந்தாபூர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று மோகன்பூரிலிருந்து சபாங் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. சட்கி பகுதிக்கு அருகில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்தது. அவர்களை காப்பாற்ற டிரைவர் பேருந்தை திருப்பியதால் சாலையோரம் இருந்த கால்வாயினுள் பேருந்து கவிழ்ந்தது.

    இந்த கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய அரசாங்கம் இந்த வாரத்தை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×