search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீவிரவாதிகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மனித குலத்திற்கு பேரழிவு - ராணுவ தளபதி பிபின் ராவத்
    X

    தீவிரவாதிகள் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மனித குலத்திற்கு பேரழிவு - ராணுவ தளபதி பிபின் ராவத்

    தீவிரவாதிகள் நவீன அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் மனித குலத்திற்கு பேரழி ஏற்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெற்று வரும் ராய்சினா மாநாட்டில் ராணுவ தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிற்குள் நுழையும் தீவிரவாதிகள் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயுதங்கள் வைத்துள்ளனர். தீவிரவாதிகள் அணு மற்றும் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவது மனித குலத்திற்கு பேரழிவாகும். இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகள் சர்வதேச எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர்.

    தீவிரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களையும் தடுக்க வேண்டும். முதலில் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் நாடுகளை அடையாளம் காண வேண்டும். மேலும் தீவிரவாதிகள் சமூக ஊடகங்கள் மூலம் எளிதாக தகவல்களை பறிமாற்றம் செய்கின்றனர். இணையங்களில் சில கட்டுப்பாடுகள் வைப்பதன் மூலம் தீவிரவாத அமைப்புகள் இணையங்களை பயன்படுத்துவதை தடுக்கலாம். மக்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் தீவிரவாதத்தை தடுப்பதற்கு இது போன்ற கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு பிபின் ராவத் கூறினார்.

    Next Story
    ×