search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாசின் எம்.பி. பதவியை பறிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
    X

    அன்புமணி ராமதாசின் எம்.பி. பதவியை பறிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

    ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாசின் எம்.பி. பதவியை பறிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #supremeCourt #Anbumaniramadoss
    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்தியாவின் 14-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நடைபெற்ற வாக்குப்பதிவில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.பி.யான அன்புமணி ராமதாஸ் பங்கேற்க மாட்டார் என அக்கட்சி தலைமை அறிவித்தது.

    காவிரி நதிநீர் மேலாண்மை குழுவை நியமிக்கமால் இழுத்தடித்துவரும் மத்திய அரசின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பா.ம.க. தலைமை தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்கவில்லை.

    ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாசின் எம்.பி. பதவியை பறிக்க கோரி தமிழ்நாட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காததால் தனக்கு வாக்களித்த மக்களை அன்புமணி மோசடி செய்து விட்டார் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னர் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.



    ‘ஜனாதிபதி தேர்தலில் அன்புமணி ராமதாஸ் வாக்களிக்காமல் போய் இருக்கலாம். ஆனால், அதைவைத்து அவரை எங்களால் எம்.பி. பதவியில் இருந்து எப்படி தகுதி நீக்கம் செய்ய முடியும்? ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காவிட்டால் எம்.பி. பதவியில் நீடிக்க முடியாது என்று சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டும்’ என்று தெரிவித்த நீதிபதிகள் அம்மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும், நகைச்சுவையாக, ’அவருக்கு அடுத்தமுறை ஓட்டு போடாதீர்கள்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
    Next Story
    ×