search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி
    X

    தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் - மம்தா பானர்ஜி

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். #MamataBanerjee #Pongal2018 #Pongal

    கொல்கத்தா:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசித்துவரும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே எழுந்து புத்தாடை உடுத்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    நேற்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. நாளை மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்தநாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.  

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 



    அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “பொங்கல் விழாவில் எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிமை கிடைத்திட வாழ்த்துகிறேன். தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். #MamataBanerjee #Pongal2018 #Pongal #tamilnews
    Next Story
    ×