search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்ட்டோசாட்-2: இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ
    X

    கார்ட்டோசாட்-2: இந்தியாவின் 100-வது செயற்கைக் கோளை விண்ணில் நிலைநிறுத்தியது இஸ்ரோ

    பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. #ISRO #PSLV #Cartosat2
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்கி விண்ணில் செலுத்தி வருகிறது.

    அவ்வகையில், தொலைதூர உணர்திறன் செயற்கைக்கோள் ‘கார்ட்டோசாட்-2’ உள்பட 31 செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.



    28 மணி நேர கவுண்ட்-டவுன் முடிந்து  சரியாக இன்று காலை 9:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 31 செயற்கைக்கோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-40 விண்ணில் சிறிப்பாய்ந்தது. அதன் அனைத்து நிலைகளும் சிறப்பாக செயல்பட்டு செயற்கைக் கோள்கள் தனித்தனியாக பிரியத் தொடங்கின. 

    இந்த பணி வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 வெற்றிகரமாக புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் புறப்பட்ட 17-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது. இதேபோல் மற்ற 30 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.

    இந்தியாவின் 100-வது செயற்கைக்கோள் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர்  கிரண்குமார் பாராட்டு தெரிவித்தார்.

    ‘கடைசியாக பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்தும்போது கோளாறு ஏற்பட்டது. அந்த கோளாறு முறையாக சரிசெய்யப்பட்டு வெற்றிகரமாக செலுத்த முடியும் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி நாட்டிற்கு புத்தாண்டு பரிசு ஆகும்’ என்றும் கிரண்குமார் குறிப்பிட்டார்.  #ISRO #PSLV #Cartosat2 #tamilnews

    Next Story
    ×