search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சொந்த தொகுதிக்கு செல்கிறார் ராகுல்
    X

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக சொந்த தொகுதிக்கு செல்கிறார் ராகுல்

    காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின் ராகுல் காந்தி முதல்முறையாக அடுத்த வாரம் தனது சொந்த தொகுதியான அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி அனைத்து மாநிலங்களிலும் கட்சி அமைப்பை பலப்படுத்துவது தொடர்பாக மேலிட நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தனது சொந்த தொகுதியான அமேதிக்கு அடுத்த வாரம் 15 மற்றும் 16 தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின் ராகுல் அமேதி தொகுதிக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய வம்சாவளியினருக்கான சர்வதேச அமைப்பின் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொள்வதற்காக பஹ்ரைன் சென்றிருந்த ராகுல் செவ்வாய்க்கிழமை இந்தியாவிற்கு திரும்பினார். அவர் பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசரும், துணை பிரதமருமான ஷேக் சல்மான் பின் ஹமாஸ் அல் கலிபா மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் காலித் பின் அஹமத் கலிபா ஆகிய இருவரையும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

    தனது பஹ்ரைன் பயணம் குறித்து டுவிட் செய்த ராகுல், 'பஹ்ரைன் பயணத்தை மிகவும் சிறப்பாக அமைத்த அனைவருக்கும் நன்றி. பஹ்ரைன் மக்கள் மற்றும் அங்குள்ள இந்திய சமூகத்தைச் சேர்ந்த மக்களின் அன்பு, விருந்தோம்பல் பண்பிற்கு நன்றி' என கூறியிருந்தார்.

    Next Story
    ×