என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்க தடை
Byமாலை மலர்6 Jan 2018 5:27 AM GMT (Updated: 6 Jan 2018 5:27 AM GMT)
தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்ற புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:
பிரபலங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தான் பெரும் பாலும் விளம்பரங்களில் ஒப்பந்தமாகுகிறார்கள்.
பல விளம்பரங்கள் தவறாக வருகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டது.
இது குறித்து ஆராய பாராளுமன்ற குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது.
அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும். அதாவது தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே நேரத்தில் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்ற பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. #tamilnews
பிரபலங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தான் பெரும் பாலும் விளம்பரங்களில் ஒப்பந்தமாகுகிறார்கள்.
பல விளம்பரங்கள் தவறாக வருகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டது.
இது குறித்து ஆராய பாராளுமன்ற குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது.
அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும். அதாவது தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதே நேரத்தில் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்ற பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X