என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்தலாக் மசோதா நிறைவேறாமலே முடிவடைந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
Byமாலை மலர்5 Jan 2018 9:14 AM GMT (Updated: 5 Jan 2018 9:14 AM GMT)
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேறாமலே மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டது.#rajyasabha #adjourned #sinedie
புதுடெல்லி:
குஜராத் உள்ளிட்ட சில மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 2017-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-12-2017 அன்று தொடங்கியது.
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை பாகிஸ்தானுடன் தொடர்புப்படுத்தி பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தும், இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையின் நடவடிக்கைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
அதன்பின், நிதி தீர்வு மற்றும் பாதுகாப்பு மசோதா, முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா உள்பட சில மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
பீமா கோரேகா நினைவு தினத்தன்று சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ஆளும்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் தங்களது உறுப்பினர்களை தவறாது அவைக்கு வரவேண்டும் என கேட்டுக் கொண்டது.
ஆனால், இன்று காலை அவை தொடங்கியதும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையின் இந்த தொடரில் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதாவை நிறைவேற்றாமல் அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
மேலும், மாநிலங்களவையில் இந்த மாதத்துடன் ஓய்வுபெறும் டெல்லியை சேர்ந்த கரண்சிங், ஜனார்தன் திவேதிமற்றும் பர்வேஸ் ஹஷ்மி மூன்று எம்.பி.க்களை, அவர்களது பணிகளை பாராட்டி வழியனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
#rajyasabha #adjourned #sinedie #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X