என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: வாலிபர்கள் கைது
திருவனந்தபுரம்:
வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் புலனாய்வு பிரிவினர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலையில் வளைகுடா நாட்டில் இருந்து வந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த பயணிகள் மலப்புரத்தைச் சேர்ந்த அபுபக்கர், முகம்மது ஷபி ஆகியோர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களின் உடைமைகளை பரிசோதித்து பார்த்தபோது பேட்டரி பொருட்களுக்குள் 3.17 கிலோ தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாகும். அதனை கைப்பற்றிய அதிகாரிகள் அபுபக்கர், முகம்மது ஷபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேருமே தங்கம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் யாருக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டார்கள்? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்