என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாஜ்மகாலில் ஷாஜகான் - மும்தாஜ் கல்லறைக்கு செல்ல தடை
ஆக்ரா:
உலக அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாஜ்மகாலை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து விட்டனர். உள்ளே நுழைவதற்கான நேரம் முடிவடையும் தருவாயில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இதனால் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் சிக்கி 5 பேர் காயம் அடைந்தனர்.
எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை எடுக்க தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டது.
அதை தொடர்ந்து தாஜ்மகாலில் உள்ளே இருக்கும் ஷாஜகான் மற்றும் மும்தாஜ் கல்லறைக்கு செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தற்காலிக பரீட்சார்த்த நடவடிக்கை என தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடை இன்று முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்