என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2019 நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் - சிவசேனா
Byமாலை மலர்25 Dec 2017 6:05 PM GMT (Updated: 25 Dec 2017 6:05 PM GMT)
குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய உத்வேகத்துடன் மீண்டு வருவார் என சிவசேனா கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
மும்பை:
குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய உத்வேகத்துடன் மீண்டும் வருவார் என சிவசேனா பாராட்டியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. கூறியிருந்தது. ஆனால், 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. குஜராத்தில் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. ராகுல்காந்தி - ஹர்திக் பட்டேல் அணி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடிக்கும் ராகுல்காந்திக்கும் இடையே நடைபெற்ற போட்டி என சிவசேனா கட்சியி்ன் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவினாலும் பா.ஜ.க. தோல்வி பயத்தில் அரண்டு போக வைத்த ராகுலின் பிரச்சாரம் பாராட்டிற்குரியது என சிவசேனா பாராட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் அக்கட்சியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத் தேர்தலில் தோற்றாலும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி புதிய உத்வேகத்துடன் மீண்டும் வருவார் என சிவசேனா பாராட்டியுள்ளது.
குஜராத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.க. கூறியிருந்தது. ஆனால், 100 இடங்களில் வெற்றி பெறுவது கூட கடினமான இலக்கு என்பது நிரூபணம் ஆகிவிட்டது. குஜராத்தில் 99 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது. ராகுல்காந்தி - ஹர்திக் பட்டேல் அணி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தல் பிரதமர் மோடிக்கும் ராகுல்காந்திக்கும் இடையே நடைபெற்ற போட்டி என சிவசேனா கட்சியி்ன் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவினாலும் பா.ஜ.க. தோல்வி பயத்தில் அரண்டு போக வைத்த ராகுலின் பிரச்சாரம் பாராட்டிற்குரியது என சிவசேனா பாராட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி புதிய தலைவர் அக்கட்சியை தோல்வியில் இருந்து மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என கூறியுள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளது. சிவசேனாவின் கருத்தை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X