என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சொந்த கிராமத்தில் சந்திரபாபு நாயுடு பொங்கல் கொண்டாடுகிறார்
திருமலை:
சந்திரபாபுநாயுடு தனது குடும்பத்தினருடன் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை தங்கள் சொந்த ஊரான நாராவாரிப்பள்ளியில் கொண்டாடுவது வழக்கம். முதல்-மந்திரியானதும், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரிலேயே குடும்பத்தினருடனும், பொதுமக்களுடனும் கொண்டாடி வருகிறார்.
அதேபோல், தற்போது வருகிற பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மனைவி புவனேஸ்வரி, மகனும் மந்திரியுமான லோகேஷ், மருமகள் பிராம்ஹினி மற்றும் பேரன் ஆகியோர் அடுத்த மாதம் (ஜனவரி) 13-ந்தேதி நாராவாரிப்பள்ளிக்கு வருகிறார். சொந்த ஊரில் 13, 14, 15-ந்தேதிகளில் தங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார். அத்துடன் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்குகிறார்.
மேலும் நாராவாரிப்பள்ளியில் 30 படுக்கை வசதி கொண்ட கூடுதல் மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு திருமண மண்டபம் அருகே புதிதாக விருந்தினர் மாளிகை கட்டும் பணியும் நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வரும் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, புதிய கூடுதல் மருத்துவமனை கட்டிடம், விருந்தினர் மாளிகை ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார்.
எனவே முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு சொந்த ஊருக்கு வருவதை முன்னிட்டு, சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, சந்திரகிரியை அடுத்துள்ள நாராவாரிப்பள்ளி கிராமத்துக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்