என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்
Byமாலை மலர்23 Dec 2017 10:38 AM GMT (Updated: 23 Dec 2017 10:38 AM GMT)
பஞ்சாப்பில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதியை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் அஜ்னாலா பகுதி இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவில் ரோந்து சென்றனர்.
அப்போது சுமார் 65 வயது மதிக்கத்தக்க பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் எல்லையை கடந்து வருவதை படைவீரர்கள் கண்டனர். அவர்களது எச்சரிக்கையை மீறி எல்லையில் ஊடுருவ முயன்ற அவனை, எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் சுட்டுக் கொன்றனர்.
அவனது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் அஜ்னாலா எல்லையில் ஆயுதங்களுடன் ஊடுருவ முயன்ற 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X