என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரணத்தண்டனை - புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
Byமாலை மலர்23 Dec 2017 6:03 AM GMT (Updated: 23 Dec 2017 6:14 AM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் மாவட்டங்களில் 30 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கள்ளச்சாராயத்தினால் உடல் ஊனம் ஏற்பட்டால் விற்றவருக்கு 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவிற்கு நேற்று சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
டெல்லி, குஜராத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் நடைமுறைப்படுத்த உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் மாவட்டங்களில் 30 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கள்ளச்சாராயத்தினால் உடல் ஊனம் ஏற்பட்டால் விற்றவருக்கு 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவிற்கு நேற்று சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
டெல்லி, குஜராத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் நடைமுறைப்படுத்த உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X