என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் எம்.பி.க்களின் தொடர் கோஷம்: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு
Byமாலை மலர்21 Dec 2017 6:18 AM GMT (Updated: 21 Dec 2017 6:18 AM GMT)
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை மாநிலங்களவை கூடியது. குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு காங்கிரஸ் எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் அவர்கள் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர். அவர்கள் அமைதியாகாததை தொடர்ந்து, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 15-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இன்று காலை மாநிலங்களவை கூடியது. குஜராத் தேர்தல் பிரசார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு காங்கிரஸ் எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் அவர்கள் கோஷங்களை தொடர்ந்து எழுப்பினர். அவர்கள் அமைதியாகாததை தொடர்ந்து, அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X