search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    27-ந் தேதி நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
    X

    27-ந் தேதி நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

    வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளை மத்திய அரசு நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வருகிற 27-ந்தேதி நடைபெற இருந்த வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஊதிய ஒப்பந்த கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வருகிற 27-ந் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகிகளை மத்திய அரசு நேற்று நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. டெல்லியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தில், மத்திய அரசின் தலைமை தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



    பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெங்கடாசலம் கூறியதாவது:-

    ஒரு மாதத்துக்குள் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து உள்ளனர். இதனால், வருகிற 27-ந்தேதி நடைபெற இருந்த வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×