search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி மெட்ரோ ரெயில் விபத்துக்குள்ளான விவகாரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்
    X

    டெல்லி மெட்ரோ ரெயில் விபத்துக்குள்ளான விவகாரம் - 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

    டெல்லி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான விவகாரத்தில் 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
    டெல்லி:

    டெல்லியில் மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கான பணிகள் முடிந்து தாவரவியல் பூங்கா முதல் கல்கா ஜி வரையிலான புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது. வரும் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த வழித்தடத்தின் முதல் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    டிரைவர் இல்லாமல் இந்த வழித்தடத்தில் பிற்காலத்தில் மெட்ரோ ரெயில்களை இயக்க திட்டமிட்டுள்ள அதிகாரிகள் நேற்று அதற்கான சோதனை ஓட்டத்தை நடத்திப் பார்த்தனர்

    அப்போது, டிரைவர் இல்லாமல் இயக்கப்பட்ட சோதனை ஓட்ட ரெயில் என்ஜின் கலின்டி கஞ்ச் நிலையத்தின் அருகே சுவற்றில் மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×