என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத் தேர்தல்: காங். ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி
Byமாலை மலர்18 Dec 2017 6:27 AM GMT (Updated: 18 Dec 2017 6:27 AM GMT)
குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்கம் தொகுதியில் சுயேட்சையாக களமிறங்கிய தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
காந்திநகர்:
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தது. ஆனால், இதனையடுத்து காங்கிரஸ் கட்சி திடீரென 10 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. சிறிது நேர இடைவேளையில் பா.ஜ.க 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம், குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து இவர் பலமுறை பேசியிருக்கிறார். உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய 'உனா பேரணியை' 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம் தேதிகளில் இருகட்டமாக தேர்தல் நடைபெற்றது. 68.41 சதவிகித வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகியிருந்தன. பதிவான வாக்குகள் 37 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகிறது.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க முன்னிலை வகித்து வந்தது. ஆனால், இதனையடுத்து காங்கிரஸ் கட்சி திடீரென 10 தொகுதிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. சிறிது நேர இடைவேளையில் பா.ஜ.க 105 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது. இதன் மூலம், குஜராத்தில் பா.ஜ.க ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் வத்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தலித் நல ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி பெற்றுள்ளார்.
குஜராத்தில் பசுவதை என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கும், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளையும் எதிர்த்து இவர் பலமுறை பேசியிருக்கிறார். உனாவில் நடந்த படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் பெரிய 'உனா பேரணியை' 2016ல் நடத்தி காட்டினார். இதில் 20,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X