என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் துணிகரம்: சட்டசபை அருகே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டுக் கொலை
Byமாலை மலர்16 Dec 2017 10:15 PM GMT (Updated: 16 Dec 2017 10:15 PM GMT)
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை அருகில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை அருகில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் டமாயரியாகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பிரேம் பிரகாஷ் திவாரி. இவரது ஒரே மகன்
வைபவ் (36).
இந்நிலையில், நேற்று இரவு வைபவ் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு பரிச்சயமான நபர் வந்து அழைத்துள்ளார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வைபவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டுகள் பாய்ந்து வைபவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வைபவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில், சட்டசபை அருகிலேயே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகன் சுட்டு கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை அருகில் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன் சுட்டு கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் டமாயரியாகஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பிரேம் பிரகாஷ் திவாரி. இவரது ஒரே மகன்
வைபவ் (36).
இந்நிலையில், நேற்று இரவு வைபவ் வீட்டில் இருந்தார். அப்போது அவருக்கு பரிச்சயமான நபர் வந்து அழைத்துள்ளார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் வைபவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டுகள் பாய்ந்து வைபவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வைபவ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில், சட்டசபை அருகிலேயே முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ மகன் சுட்டு கொல்லப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X