என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்15 Dec 2017 9:16 PM GMT (Updated: 15 Dec 2017 9:16 PM GMT)
மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை:
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று மதியம் அந்த வீட்டின் முதல் மற்றும் நான்காம் மாடிகளில் பழுது பார்க்கும் வேலையில் தொழிலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த ஸ்லாப்கள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளிகளின் உடல்களை மீட்டனர். கைப்பற்றிய உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இடுபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருவதாக மீட்புப் படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மராட்டிய மாநிலம் மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று மதியம் அந்த வீட்டின் முதல் மற்றும் நான்காம் மாடிகளில் பழுது பார்க்கும் வேலையில் தொழிலாளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த ஸ்லாப்கள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளிகளின் உடல்களை மீட்டனர். கைப்பற்றிய உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இடுபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருவதாக மீட்புப் படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X