search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி
    X

    மும்பை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் பலி

    மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகினர் என மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    மும்பை:

    மராட்டிய மாநிலம் மும்பையின் ஜாவேரி பஜார் பகுதியில் நான்கு மாடிகள் கொண்ட அடுக்குமாடி வீட்டில் பழுது பார்க்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில், நேற்று மதியம் அந்த வீட்டின் முதல் மற்றும் நான்காம் மாடிகளில் பழுது பார்க்கும் வேலையில் தொழிலாளிகள்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த ஸ்லாப்கள் இடிந்து விழுந்தன. இதில் அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளிகளின் உடல்களை மீட்டனர். கைப்பற்றிய உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. இடுபாடுகளை அகற்றும் பணியும் நடைபெற்று வருவதாக மீட்புப் படையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×