என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை: சுங்கசாவடி ஊழியர்களுக்கு உத்தரவு
Byமாலை மலர்13 Dec 2017 7:00 PM GMT (Updated: 13 Dec 2017 7:00 PM GMT)
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டை பாதுகாக்கும் இணையற்ற சேவையை செய்யும் ராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் தேவை.
எனவே சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் பணி நிமித்தமாக கடந்து செல்லும்போது அடையாள அட்டையை சரிபார்க்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.
சுங்கச்சாவடிகளில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே ராணுவ வீரர்களின் அடையாள அட்டையை சோதனை செய்ய வேண்டும்.
ராணுவ வீரர்கள் பணியில் உள்ள போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களை எவ்விதத்திலும் தரக்குறைவாக நடத்துதல் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராணுவ வீரர்களுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
சமீப காலமாக சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வருவதாக பல்வேறு புகார்கள் வந்தன.
இதையடுத்து, மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் வரும்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாட்டை பாதுகாக்கும் இணையற்ற சேவையை செய்யும் ராணுவ வீரர்களுக்கு மிக உயர்ந்த மதிப்பும் மரியாதையும் தேவை.
எனவே சுங்கச்சாவடிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது வாகனங்கள் பணி நிமித்தமாக கடந்து செல்லும்போது அடையாள அட்டையை சரிபார்க்க சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு அனுமதி இல்லை.
சுங்கச்சாவடிகளில் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மட்டுமே ராணுவ வீரர்களின் அடையாள அட்டையை சோதனை செய்ய வேண்டும்.
ராணுவ வீரர்கள் பணியில் உள்ள போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்கப்படுவது இதன்மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களை எவ்விதத்திலும் தரக்குறைவாக நடத்துதல் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X