search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விருந்து
    X

    தெலுங்கானா அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விருந்து

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மாநில அரசின் சார்பில் வரும் 18-ம் தேதி விருந்து அளிக்கப்படும் என முதல் மந்திரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
    ஐதராபாத்:

    கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மாநில அரசின் சார்பில் வரும் 18-ம் தேதி விருந்து அளிக்கப்படும் என முதல் மந்திரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தெலுங்கானா மாநில முதல் மந்திரி கே.சந்திரசேகர ராவின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் மாநில அரசின் சார்பில் வரும் 18-ம் தேதி விருந்து அளிக்கப்படும்.

    முன்னதாக, வரும் 14-ம் தேதி வருமானத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 2 லட்சம் கிறிஸ்தவர்களுக்கு புத்தாடை வழங்கப்படும். ஐதராபாத் நகரில் உள்ள நிஜாம் திடலில் வரும் 22-ம் தேதி நடைபெறும் கிறிஸ்துமஸ் விருந்து நிகழ்ச்சியில் முதல் மந்திரி கே.சந்திரசேகர ராவ் கலந்து கொள்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×