search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஏசியான் அமைப்பின் 10 தலைவர்கள் பங்கேற்பு
    X

    குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஏசியான் அமைப்பின் 10 தலைவர்கள் பங்கேற்பு

    டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர்களாக ஏசியான் அமைப்பை சேர்ந்த 10 தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் நடைபெறும் 2018-ம் ஆண்டின் குடியரசு தின விழாவின் போது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (ஏசியான்) சேர்ந்த 10 தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



    மேலும், இந்த விழாவில் ஏசியான் நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் ராமாயண கதையை அடிப்படையாக கொண்ட நடன நிகழ்ச்சி நடத்துவார்கள் என கூறப்படுகிறது. குடியரசு தின விழாவின் போது பல அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அப்போது இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவை வெளிப்படுத்தும் விதமாக  ஊர்தி ஒன்று அணிவகுப்பில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளனர்.

    சென்ற மாதம் நடைபெற்ற ஏசியான் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, குடியரசு தின விழாவிற்கு வருமாறு ஏசியான் தலைவர்களை அழைத்திருந்தார். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    Next Story
    ×