search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம்: ரெயில் மூலம் கடத்தப்பட்ட ரூ.6 கோடி தங்கம் பிடிபட்டது
    X

    அசாம்: ரெயில் மூலம் கடத்தப்பட்ட ரூ.6 கோடி தங்கம் பிடிபட்டது

    கொல்கத்தா செல்லும் ரெயிலில் 19 கிலோ தங்கத்தை கடத்தி சென்ற 4 பேரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர்.
    கவுகாத்தி:

    கொல்கத்தா செல்லும் ரெயிலில் 19 கிலோ தங்கத்தை கடத்தி சென்ற 4 பேரை ரெயில்வே போலீசார் இன்று கைது செய்தனர்.

    அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து இன்று கொல்கத்தா நகருக்கு புறப்பட்டு சென்ற ரெயிலில் இருந்த பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்த ரெயில்வே போலீசார் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த 4 பேரின் பெட்டிகளை ஆய்வு செய்தபோது 19 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் கைது செய்த ரெயில்வே போலீசார் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×