என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சபரிமலையில் தரிசனத்திற்கு காத்திருந்த தமிழக பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Byமாலை மலர்10 Dec 2017 1:08 PM GMT (Updated: 10 Dec 2017 1:08 PM GMT)
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சபரிமலை:
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 27-ம் தேதிவரை மண்டல பூஜை நடைபெறுகிறது. அதன்பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதி நடை சாத்தப்படும்.
கார்த்திகை முதல் நாள் மாலையிடத் தொடங்கிய பக்தர்கள், மண்டல பூஜைக்காக கோயிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு செல்கின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக போலீசார் பேரிகார்டுகள் அமைத்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புகிறார்கள். தரிசனத்திற்காக 15 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திடீரென இன்று அதிகாலை 5 மணியளவில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பாலு (வயது42) என்பது தெரியவந்துள்ளது.
தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 27-ம் தேதிவரை மண்டல பூஜை நடைபெறுகிறது. அதன்பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதி நடை சாத்தப்படும்.
கார்த்திகை முதல் நாள் மாலையிடத் தொடங்கிய பக்தர்கள், மண்டல பூஜைக்காக கோயிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு செல்கின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக போலீசார் பேரிகார்டுகள் அமைத்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புகிறார்கள். தரிசனத்திற்காக 15 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திடீரென இன்று அதிகாலை 5 மணியளவில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பாலு (வயது42) என்பது தெரியவந்துள்ளது.
தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X