search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் இன்று ஒரே பகுதியில் பிரதமர் மோடி - ராகுல் பிரசாரம்
    X

    குஜராத்தில் இன்று ஒரே பகுதியில் பிரதமர் மோடி - ராகுல் பிரசாரம்

    குஜராத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் சோமநாதபுரம் பகுதியில் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் வருகிற 9-ந்தேதியும், 14-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில், சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள 89 தொகுதிகளிலும் 9-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

    முதல் கட்ட வாக்கு பதிவு நடைபெறும் இந்த பகுதிகளில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதா, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றின் மூத்த தலைவர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதே போல் பா.ஜனதாவின் நட்சத்திர பேச்சாளராக உள்ள பிரதமர் மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் ஆதரவு திரட்டி வருகிறார்கள். காங்கிரசுக்கு துணை தலைவர் ராகுல்காந்தி ஆதரவு திரட்டி வருகிறார்.

    பிரதமர் மோடியும், ராகுல்காந்தியும் இன்று ஒரே பகுதியில் பிரசாரம் செய்கிறார்கள். பிரதமர் மோடி இன்று மோர்பி நகரில் முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதை தொடர்ந்து சோமநாதபுரம் அருகே உள்ள பராச்சி என்ற இடத்தில் பிரசாரம் செய்கிறார்.

    அப்போது புகழ்பெற்ற சோமநாதபுரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் பவநகர், நவ்சாரி ஆகிய இடங்களில் அவர் பிரசார கூட்டங்களில் பேசி ஆதரவு திரட்டுகிறார்.

    பிரதமர் பிரசாரம் செய்யும் சோமநாதபுரம் பகுதியில் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே 5 முறை பிரசாரம் செய்துள்ள ராகுல்காந்தி இன்றும், நாளையும் 6-வது முறையாக பிரசாரம் செய்ய உள்ளார்.

    டெல்லியில் இருந்து வரும் ராகுல்காந்தி இன்று மதியம் 12 மணி அளவில் டையூ விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கிர் பகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.

    அடுத்து சோமநாதபுரம் வரும் அவர், கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். தொடர்ந்து அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    அடுத்து ஜூனாகத் பகுதிக்கு செல்லும் அவர் விசாவதார் நகரில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அடுத்து தாரி, சவரகுண்டலா ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து விட்டு அமரலி என்ற இடத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்துடன் இன்றைய பிரசாரம் முடிகிறது.

    நாளை ராகுல்காந்தி லாதி, தசா, கதாதா, பர்வலா, வல்லபாய்பூர், போடட், பவநகர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    2 முக்கிய தலைவர்கள் குஜராத்தில் இன்று ஒரே நேரத்தில் பிரசாரம் செய்வதால் அங்கு தேர்தல் பிரசாரம் மிகவும் சூடுபிடித்த நிலையில் உள்ளது.

    Next Story
    ×