என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோர்ட்டு அனுமதி இல்லாமல் சசிகலாவை விசாரிக்க முடியாது: வருமானவரி துறைக்கு சிறை அதிகாரி கடிதம்
பெங்களூரு:
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
ஜெயா டி.வி. அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர்., உள்பட பல நிறுவனங்களில் தொடர்ந்து 5 நாட்கள் நடந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் சிக்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் சொத்து தொடர்பான முக்கிய ஆவணங்கள், பென்டிரைவ், லேப்-டாப் ஆகியவை சிக்கியது.
இதுதொடர்பாக சசிகலாவின் உறவினர்களான விவேக், கிருஷ்ணபிரியா, ஷகிலா ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின் போது ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர்., ஆகிய நிறுவனங்களில் 2015-ம் ஆண்டுக்கு பிறகே நாங்கள் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டோம். அதற்கு முன்பு என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது, என்று பதில் அளித்தனர்.
இதையடுத்து 2015-ம் ஆண்டுக்கு முன்பு இந்த நிறுவனங்களை நிர்வகித்து வந்த சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி பெங்களூரு ஜெயில் சூப்பிரண்டு சோமசேகருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினார்கள்.
சசிகலாவிடம் விசாரிக்க எந்த நேரத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு ஜெயிலுக்கு வருவார்கள் என்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக சசிகலாவை அவரது வக்கீல் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் ஜெயில் சூப்பிரண்டு சோமசேகர் சென்னையில் உள்ள வருமானவரித்துறை மண்டல இயக்குனருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
சசிகலாவும், இளவரசியும் குற்ற வழக்கில் சுப்ரீம் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கைதிகளிடம் விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வேண்டும். கோர்ட்டு அனுமதி இல்லாமல் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது.
கர்நாடக மாநில ஜெயில் விதிகளின்படி கோர்ட்டு உத்தரவு இருந்தால் மட்டுமே வருமானவரித்துறை விசாரணைக்கேற்ற நாள், இடம் ஆகியவற்றை ஒதுக்கித் தர முடியும். அரசு துறைரீதியான கடிதம் மட்டுமே அதற்கு போதுமானது அல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதிக்கக் கோரி பெங்களூரு மாநகர கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இதுதொடர்பாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
கோர்ட்டு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் சசிகலாவிடம் விசாரணை நடத்த அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் சசிகலாவிடம் விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்