என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூர் அருகே இளம் பெண் கற்பழிப்பு: 4 பேர் கும்பல் வெறிச்செயல்
Byமாலை மலர்26 Nov 2017 5:45 AM GMT (Updated: 26 Nov 2017 5:45 AM GMT)
பெங்களூரில் கணவரை அடித்து உதைத்து இளம் பெண்ணை கற்பழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெங்களூர்:
பெங்களூர் அருகேயுள்ள நீலமங்கலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஜவுளி ஆலையில் பணிபுரிகிறார். இவரது கணவரும் அதே தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசுக்கு இளம் பெண் மீது ஆசை ஏற்பட்டது. எனவே அவரை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
அதற்கு இளம் பெண் மறுத்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் வெங்கடேசை கன்னத்தில் அறைந்தார். மேலும் கூச்சல் போட்டு ரோட்டில் சென்ற பொதுமக்களை உதவிக்கு அழைத்தார். எனவே அங்கிருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.
மாலையில் இளம் பெண்ணின் வீட்டுக்கு வெங்கடேஷ் வந்தார். அவரது நண்பர்கள் 3 பேரும் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் ரவுடி ஆவான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அவர்கள் இளம் பெண்ணின் கணவரை அடித்து உதைத்து வீட்டில் இருந்த சமையல் அறைக்குள் தள்ளி கதவை பூட்டினர்.
பின்னர் இளம் பெண்ணை வெங்கடேசும், அவரது 3 நண்பர்களும் கற்பழித்தனர். நள்ளிரவுக்கு பின் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
மறுநாள் இது குறித்து மதநாயகனஹள்ளி போலீசில் இளம் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேஷ் இதற்கு முன்பு இளம் பெண் வேலை பார்க்கும் ஜவுளி ஆலையில் பணிபுரிந்தார்.
அப்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணை 2 தடவை அவரது வீட்டில் சென்று வெங்கடேஷ் தனது வாகனத்தில் இறக்கி விட்டிருக்கிறார். அதை தொடர்ந்து அவர் மீது காதல் வயப்பட்டு தன்னை திருமணம் செய்யும் படி தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதற்கிடையே ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ், அவரது நண்பர்கள் ராகவேந்திரா என்கிற குமார், விஜய குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். புனீத் என்பவனை போலீசார் தேடி வருகின்றனளர். இவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்.
பெங்களூர் அருகேயுள்ள நீலமங்கலா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஜவுளி ஆலையில் பணிபுரிகிறார். இவரது கணவரும் அதே தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.
அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசுக்கு இளம் பெண் மீது ஆசை ஏற்பட்டது. எனவே அவரை கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்தார். தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.
அதற்கு இளம் பெண் மறுத்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழி மறித்த வெங்கடேஷ் தன்னை திருமணம் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் வெங்கடேசை கன்னத்தில் அறைந்தார். மேலும் கூச்சல் போட்டு ரோட்டில் சென்ற பொதுமக்களை உதவிக்கு அழைத்தார். எனவே அங்கிருந்து வெங்கடேஷ் தப்பி ஓடிவிட்டார்.
மாலையில் இளம் பெண்ணின் வீட்டுக்கு வெங்கடேஷ் வந்தார். அவரது நண்பர்கள் 3 பேரும் வந்து இருந்தனர். அவர்களில் ஒருவன் ரவுடி ஆவான். திடீரென வீட்டுக்குள் புகுந்த அவர்கள் இளம் பெண்ணின் கணவரை அடித்து உதைத்து வீட்டில் இருந்த சமையல் அறைக்குள் தள்ளி கதவை பூட்டினர்.
பின்னர் இளம் பெண்ணை வெங்கடேசும், அவரது 3 நண்பர்களும் கற்பழித்தனர். நள்ளிரவுக்கு பின் அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
மறுநாள் இது குறித்து மதநாயகனஹள்ளி போலீசில் இளம் பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வெங்கடேஷ் இதற்கு முன்பு இளம் பெண் வேலை பார்க்கும் ஜவுளி ஆலையில் பணிபுரிந்தார்.
அப்போது கற்பழிக்கப்பட்ட பெண்ணை 2 தடவை அவரது வீட்டில் சென்று வெங்கடேஷ் தனது வாகனத்தில் இறக்கி விட்டிருக்கிறார். அதை தொடர்ந்து அவர் மீது காதல் வயப்பட்டு தன்னை திருமணம் செய்யும் படி தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரிய வந்தது.
இதற்கிடையே ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ், அவரது நண்பர்கள் ராகவேந்திரா என்கிற குமார், விஜய குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். புனீத் என்பவனை போலீசார் தேடி வருகின்றனளர். இவர்கள் அனைவரும் 25 முதல் 30 வயது வரை உள்ளவர்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X