என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்கண்டில் 15 கிலோ எடையுள்ள இரு சிலிண்டர் குண்டுகள் பறிமுதல்: அசம்பாவிதம் தவிர்ப்பு
Byமாலை மலர்25 Nov 2017 2:09 PM GMT (Updated: 25 Nov 2017 2:09 PM GMT)
ஜார்கண்ட் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரை தீர்த்துக்கட்ட சாலையோரம் வைக்கப்பட்டிருந்த 15 கிலோ எடையுள்ள இரு சிலிண்டர் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ராஞ்சி:
ஜார்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. பெரும் பணக்காரர்களையும், பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாட மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய சிறப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கோடெர்மா மாவட்டம், சன்ட்வாரா பகுதிக்கு உட்பட்ட டன்டி பஞ்சாயத்து பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்ட்ரி கிராமம் அருகே இந்த சாலை பணிகள் நடைபெற்றுவரும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சிலிண்டர்கள் கிடப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.
அவர்கள் விரைந்துசென்று பார்த்தபோது முழுவதும் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த 15 கிலோ எடையுள்ள இரு சிலிண்டர் குண்டுகளை பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக அவற்றை செயலிழக்க வைத்ததால் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடக்கவிருந்த தீவிரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டது.
ஜார்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் மற்றும் நக்சலைட்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. பெரும் பணக்காரர்களையும், பாதுகாப்பு படையினரையும் குறிவைத்து இந்த கும்பலை சேர்ந்தவர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை வேட்டையாட மத்திய பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் அடங்கிய சிறப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கோடெர்மா மாவட்டம், சன்ட்வாரா பகுதிக்கு உட்பட்ட டன்டி பஞ்சாயத்து பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சின்ட்ரி கிராமம் அருகே இந்த சாலை பணிகள் நடைபெற்றுவரும் இடத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இரு சிலிண்டர்கள் கிடப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.
அவர்கள் விரைந்துசென்று பார்த்தபோது முழுவதும் வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில் சாலையோரம் கிடந்த 15 கிலோ எடையுள்ள இரு சிலிண்டர் குண்டுகளை பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக அவற்றை செயலிழக்க வைத்ததால் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடக்கவிருந்த தீவிரவாத தாக்குதல் தவிர்க்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X