என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளை கருப்பு தினமாக அனுசரிக்க இடதுசாரி கட்சிகள் முடிவு
Byமாலை மலர்22 Nov 2017 2:06 PM GMT (Updated: 22 Nov 2017 2:06 PM GMT)
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவெடுத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 6 கட்சிகள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி:
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் இருந்த மிகப்பழமையான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய இயக்கங்கள் இதே நாளில் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 6 இடதுசாரி இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பான அறிக்கையில், டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வளரும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியுடன் போராடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினமான அன்று, பசுபாதுகாப்பு என்ற பெயரில் தலித்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியாவில் இருந்த மிகப்பழமையான பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய இயக்கங்கள் இதே நாளில் பாபர் மசூதியை மீண்டும் அதே இடத்தில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்துவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 6 இடதுசாரி இயக்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பான அறிக்கையில், டிசம்பர் 6-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் வளரும் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியுடன் போராடவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினமான அன்று, பசுபாதுகாப்பு என்ற பெயரில் தலித்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் பேரணி நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X