search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைத்ததாக புகார்: சோனியா காந்திக்கு பாரதீய ஜனதா பதிலடி
    X

    குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைத்ததாக புகார்: சோனியா காந்திக்கு பாரதீய ஜனதா பதிலடி

    குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைத்ததாக புகார் கூறிய சோனியாவுக்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
    புதுடெல்லி:

    குளிர்கால கூட்டத்தொடரை சீர்குலைத்ததாக புகார் கூறிய சோனியாவுக்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வியிடமும் சோனியாவின் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, “நெருக்கடி நிலையின்போது பாராளுமன்றத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சிதான் இப்போது பாராளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசுகிறது” என்று சாடினார்.

    மேலும், “முக்கிய தேர்தல்கள் நடைபெறுகிறபோது எத்தனையோ முறை பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதிகள் நிச்சயிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

    இதே கருத்தை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் வெளிப்படுத்தி உள்ளார். அவர், “தேர்தல்களுடன் மோதாத வகையில் பாராளுமன்ற கூட்டத்தொடர்கள் பல முறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். 
    Next Story
    ×