என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளா: எரிபொருள் கிடங்கில் விபத்துக்குள்ளான கடற்படை கண்காணிப்பு விமானம்
Byமாலை மலர்21 Nov 2017 10:28 AM GMT (Updated: 21 Nov 2017 10:28 AM GMT)
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைக்கு சொந்தமான ஆளில்லாத சிறிய ரக கண்காணிப்பு விமானம் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைத்தளம் உள்ளது. கடலோர பகுதிகளை கண்காணிப்பதற்காக இந்த தளத்தில் இருந்து ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை ஆளில்லாத விமானம் ஒன்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.
பறந்து கொண்டிருந்த விமானமானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெலிங்டன் தீவில் கீழே விழுந்தது. இந்த தீவினில், பெட்ரோல், டீசல், எத்தனால் போன்ற தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இதனையடுத்து, உடனடியாக அங்கு சென்ற கடற்படை அதிகாரிகள் விமானத்தை பாதுகாப்பாக மீட்டனர்.
ஒழுங்கற்ற கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விமானம் பறக்கும் தன்மையை இழந்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த விபத்தினால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கேரள மாநிலம் கொச்சியில் கடற்படைத்தளம் உள்ளது. கடலோர பகுதிகளை கண்காணிப்பதற்காக இந்த தளத்தில் இருந்து ரிமோட் மூலம் இயங்கும் ஆளில்லாத சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று காலை ஆளில்லாத விமானம் ஒன்று வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது.
பறந்து கொண்டிருந்த விமானமானது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வெலிங்டன் தீவில் கீழே விழுந்தது. இந்த தீவினில், பெட்ரோல், டீசல், எத்தனால் போன்ற தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் உள்ளது. இதனையடுத்து, உடனடியாக அங்கு சென்ற கடற்படை அதிகாரிகள் விமானத்தை பாதுகாப்பாக மீட்டனர்.
ஒழுங்கற்ற கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக விமானம் பறக்கும் தன்மையை இழந்ததாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த விபத்தினால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X