என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை: 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது ராணுவம்
Byமாலை மலர்21 Nov 2017 5:43 AM GMT (Updated: 21 Nov 2017 5:44 AM GMT)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் நடந்த சண்டையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குமார் மொகல்லா, மகம், அனன்வான் மற்றும் ஹாச்பர்க் ஆகிய பகுதிகளில் ராஷ்ரிய ரைபிள்ஸ், சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவ வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குமார் மொகல்லா, மகம், அனன்வான் மற்றும் ஹாச்பர்க் ஆகிய பகுதிகளில் ராஷ்ரிய ரைபிள்ஸ், சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X